25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >>


ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில்  இந்தியாவின் சம்ரத் ராணா-சுருச்சி சிங் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில்  இந்தியாவின் சம்ரத் ராணா-சுருச்சி சிங் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இறுதிசுற்றில் இந்தியாவின் சம்ரத் ராணா-சுருச்சி சிங் ஜோடி 479.6 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது. உஸ்பெகிஸ் தானின் நிஜினா சைட்குலோவா-முகமது கமலோவ் ஜோடி 481.3 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றது. சீனதைபேயின் செங் யென் சிங்-ஹிக் சியாங் சென் கூட்டணி 412.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றது.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் ராஷ்மிகாசாஹல்(237.9 புள்ளி)தங்கப்பதக்கமும், வன்ஷிகா சவுத்ரி (236.7 புள்ளி) வெள்ளிப்பதக்க மும் வென்றனர். இந்தோனேசியாவின் ஆசிபாரிஹாததுல் வெண்கலப்பதக்கம் பெற்றார். இதன் இளையோர் பிரிவில் இந்தியாவின் பிரியான்ஷி புர்வா (234.8 புள்ளி) தங்கப்பதக்கத்தையும், சாஹிக் கோக்லா (233) வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

 பெண்கள் ஜூனியர் மற்றும் இளையோர்அணிகள் பிரிவிலும் இந்தியா தங்கப்பதக் கத்தை வென்றது. முடிவில் இந்தியா 10 தங்கம், 5 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்தில் தொடருகிறது. உஸ்பெ கிஸ்தான் 3 தங்கப்பதக்கத்துடன் 2-வது இடத்தில் இருக்கிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News